டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, ஜிம்பாப்வே இடையேயான மிக முக்கியமான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பைத் தொடரின் முக்கிய கட்டத்தில் இந்திய அணி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் மெகா வெற்றியைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அல்லது திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு அணியில் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
24
மோசமான ஃபார்மில் அபிஷேக்
தொடருக்கு முன்பாக அதிரடி காட்டி வந்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இந்த தொடரில் மீண்டும் மீண்டும் சொதப்பி வருகிறார். 5 போட்டிகளில் களம் இறக்கப்பட்ட அவர் 3 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். காயம் காரணமாக ஒரு போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு களம் இறக்கப்பட்டார். இந்த போட்டியில் 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு ஆட்டம் இழந்தார். தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவர் களம் இறக்கப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
34
ஒன் டவுணில் சஞ்சு..
ஒன் டவுணின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் இந்திய அணியில் ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர், இவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வருகிறார். ஒருசில போட்டிகளில் சஞ்சு சிறப்பாக செயல்பட்டாலும் அவரது ஃபார்ம் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் அவரை ஒன் டவுண் அல்லது மிடில் ஆர்டரில் களம் இறக்க வேண்டுமென்கின்றனர்.
ரசிகர்களின் கோரிக்கைக்கு தகுந்தவாறு மிடில் ஆர்டரில் களம் இறக்கப்பட்டு வரும் திலக் வர்மா இந்த தொடர் முழுவதுமே மிகவும் மென்மையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். அவரது பேட்டிங்கில் மிகப்பெரிய ஸ்கோர் வரவில்லை. இதனால் திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் பினிஷிங் ரோலை செய்து வரும் ரிங்கு சிங் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போது அந்த இடத்தில் சஞ்சு இறக்கப்படும் பட்சத்தில் பெரிய ஷாட்களை அடிக்கக் கூடிய பினிஷராக அவர் செயல்படுவார்.