இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், தொடக்கம் முதலே ஐக்கிய அரபு அமீரக அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய வைபவ் சூர்யவன்ஷி சகட்டு மேனிக்கு பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசித் தள்ளினார்.
மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை நொறுக்கிய அவர் வெறும் 32 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 42 பந்துகளில் 11 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 144 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதிவேக சதம் விளாசிய 2வது இந்தியர்
32 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அபிஷேக் சர்மா, உர்வில் படேல் ஆகியோர் 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் விளாசிய இந்தியர்கள் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்தில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் நொறுக்கிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.