தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஐடன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கெல்டன் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 57 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் பும்ராவின் சூப்பர் பவுலிங்கில் 23 ரன் எடுத்து போல்டானார். பின்பு ஓரளவு சிறப்பாக விளையாடிய மார்க்ரமும் (31 ரன்கள்) பும்ராவின் பவுன்ஸ் பந்துக்கு இரையானார்.
பின்பு தடம்புரண்ட பேட்ஸ்மேன்கள்
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா (3) குல்தீப் பந்தில் கேட்ச் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 71/3 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த வியான் முல்டர், டோனி டி சோர்ஸி அணியை சிறிது சரிவில் இருந்து மீட்டனர்.
ஸ்கோர் 114 ஆக உயர்ந்தபோது சூப்பராக விளையாடிய முல்டர் (24) தேவையில்லாமல் ரிவர்ஸ் ஷாட் அடித்து குல்தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதன்பின்பு டோனி டி சோர்ஸியும் (24) பும்ரா பந்தில் வெளியேற தென்னாபிரிக்கா அணி தடம்புரள ஆரம்பித்தது.