வைபவ் சூர்யவன்ஷியை சசி தரூர் இந்த அளவுக்கு புகழ்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. விஜய் ஹசாரே டிராபி தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேனின் இரண்டாவது வேகமான சதம் இதுவாகும்.
டி வில்லியர்ஸின் சாதனை முறியடிப்பு
மேலும் ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் (14 வயது 272 நாட்கள்) என்ற பெருமையை அவர் பெற்றார். அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.