Vaibhav Suryavanshi: ஐபிஎல் 2026 தொடரில் உலககையே திரும்பி பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி 700 ரன்கள் அடிப்பேன் என்று முன்கூட்டியே எழுதி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் இளம் பேட்டிங் புயல் 15 வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடரில் பல விருதுகளை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறந்த வீரராக நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால், தனது ஆட்டத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் தேவை என்பதை இந்த சீசன் கற்றுக் கொடுத்ததாக அவர் கூறினார். இனிவரும் காலங்களில் அதில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே 700 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தனது போனில் உள்ள நோட்ஸ் செயலியில் ஒரு தனிப்பட்ட இலக்கை எழுதி வைத்திருந்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அந்த இலக்கை எட்டுவதற்கான நிலையை சரிபார்த்து வந்ததாகவும், தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டதுடன் இந்த இலக்கை எட்டியது தனக்கு திருப்தி அளித்ததாகவும் அவர் கூறினார்.
24
முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்
"இந்த விருதுகளை எல்லாம் வென்றது ஒரு சிறந்த உணர்வு. இந்த சீசனில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். களத்திலும், களத்திற்கு வெளியேயும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. நான் நீண்ட காலம் விளையாட விரும்பினால், சில விஷயங்களில் நான் உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே, இனி அதுதான் என் கவனமாக இருக்கும், வரவிருக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.
ஐபிஎல் சீசனுக்கு முன்பு, என் போனில் உள்ள நோட்ஸ் செயலியில் இந்த ஐபிஎல் சீசனில் 700 ரன்கள் அடிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தேன். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், நான் எங்கே இருக்கிறேன் என்று சரிபார்ப்பேன், அது நான் அடைய முடிந்த ஒரு இலக்கு," என்று சூர்யவன்ஷி ஜியோஹாட்ஸ்டாரில் கூறினார்.
34
5 விருதுகளை அள்ளிய வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026 தொரில் வைபவ் சூர்யவன்ஷி பெரும்பாலான விருதுகளை வென்று அசத்தினார். தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர், ஆரஞ்சு கேப் வெற்றியாளர் மற்றும் சீசனின் சூப்பர் சிக்ஸர்ஸ் ஆகிய விருதுகளை அவர் தட்டிச் சென்றார். வைபவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு அசாதாரணமான தொடரில் விளையாடி, 776 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 237.30 என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யவன்ஷியின் நிலையான ஆட்டம், குறிப்பாக சாதனை படைத்த 72 சிக்ஸர்கள், பல நீண்டகால ஐபிஎல் சாதனைகளை முறியடிக்க உதவியது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களில் ஒருவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
வெறும் 15 வயதில், சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு கேப் வென்ற இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் சுதர்சன் 2025-ல் 23 வயது மற்றும் 231 நாட்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். சுப்மன் கில் 2023-ல் 23 வயது மற்றும் 263 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்