அவர் வேறு யாருமல்ல, இந்திய வம்சாவளியான நமது தமிழ்நாட்டை சேர்ந்த லெக் ஸ்பின்னர் ஆதித்யா அசோக். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்த ஆதித்யா அசோக், தனது நான்கு வயது வரை இந்தியாவில்தான் இருந்தார். அதன்பிறகு, அவரது பெற்றோர் வேலை நிமித்தமாக ஆக்லாந்திற்கு குடிபெயர்ந்தனர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆதித்யா, அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நியூசிலாந்தின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்
இதன் விளைவாக, 2020ஆம் ஆண்டுக்கான U-19 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். இதைத் தொடர்ந்து, 2021-ல் ஆக்லாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பகமான பந்துவீச்சாளராக வளர்ந்தார். பின்னர், 2022-23ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் வென்றார்.