T20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தான் செய்வது நியாயமா? சூர்யகுமார் சொன்ன 'நச்' பதில்!

Published : Feb 05, 2026, 08:45 PM IST

T20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்துள்ள நிலையில், இது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 

PREV
13
டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பையில் பிப்ரவரி 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து பிசிசிஐ உத்தரவுப்படி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீக்கியது.

இந்தியாவுடன் விளையாட மாட்டோம் பாகிஸ்தான்

இதனால் பொங்கியெழுந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டுமென்றே கூறி இலங்கையில் போட்டியை மாற்ற விரும்பியது. இதற்கு ஐசிசி மறுத்ததுடன் வங்கதேசத்தை டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கியது. 

வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலையில், தான் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமாரிடம் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

23
சூர்யகுமார் யாதவ் கருத்து

இதற்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், ''எங்களின் மனநிலை தெளிவாக உள்ளது. போட்டியை நாங்கள் விளையாட மறுக்கவில்லை. அது மறுபக்கத்தில் (பாகிஸ்தான்) இருந்து வந்துள்ளது. ஐசிசி அதிகாரப்பூர்வ அட்டவணையை தேர்வு செய்துள்ளது. போட்டியை நடத்த நடுநிலையான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

பிசிசிஐ மற்றும் நமது அரசு இதற்கு ஒத்துழைத்துள்ளது. நாங்கள் நிச்சயம் கொழும்பு செல்வோம். இப்போதைக்கு எங்களின் எண்ணம் முதல் போட்டியை (பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவுக்கு எதிராக) எதிர்கொள்வது தான். அதன்பிறகு கொழும்பு செல்வோம்'' என்றார்.

வாஷிங்டன் சுந்தர் காயம்

மேலும் இந்திய அணியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்வதில் அணி அவசரம் காட்டவில்லை என்று சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தினார்.

 ஜனவரி 11 அன்று வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தார் காயம் அடைந்தார். அவர் காயம் குணமாகவில்லை என கூறப்படுகிறது. மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.

33
வாஷிங்டன் சுந்தருக்கு பதில் மாற்று வீரர் யார்?

இது குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், ''வாஷிங்டன் விஷயத்தில் நாங்கள் பொறுமையாக இருப்போம், மாற்று வீரரைத் தேர்வு செய்வதில் அவசரம் காட்ட விரும்பவில்லை'' என்று தெரிவித்தார். தொடர்ந்து சூர்யகுமார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரைப் பாராட்டியதோடு, அணியில் ஒரு நேர்மறையான மற்றும் வீரர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியதற்காக அவருக்குப் பெருமை சேர்த்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories