நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்த திலக் வர்மா 19 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் (16 பந்தில் 30 ரன்), அக்சர் படேல் (23 பந்தில் 35 ரன்), ஹர்திக் பாண்ட்யா 10 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன், கார்பின் போஸ், அன்ரிச் நோட்ர்ஜே மற்றும் க்வெனா மபாகா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய அணி வெற்றி
பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 210 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கேப்டன் எய்டன் மார்க்ரம் 19 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். ரியான் ரிக்கல்டன் 21 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்தில் 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசினார்.