பின்பு இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியும், ஆரோன் ஜார்ஜும் சூப்பரான தொடக்கம் அளித்தனர். ஆரோன் ஜார்ஜ் மெதுவாக விளையாட சூர்யவன்ஷி தனது வழக்கமான ஸ்டைலில் சிக்சர் மழை பொழிந்தார். 33 பந்தில் 4 சிக்சர்களுடன் 68 ரன்கள் அடித்து அவர் அவுட் ஆனார்.
பைனலில் இந்தியா, இங்கிலாந்து
பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும் சிறப்பாக விளையாடி 59 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் பொறுப்பாக விளையாடி சூப்பர் சதம் (115 ரன்) விளாசிய கேரள வீரர் ஆரோன் ஜார்ஜ் அணி வெற்றியை நெருங்கிய சமயத்தில் அவுட் ஆனார்.
இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று பைனலுக்குள் சென்றுள்ளது. பிப்ரவரி 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியாவும், இங்கிலாந்தும் பைனலில் மோதுகின்றன.