ரன்களை வழங்கும்போது பலரும் பலவிதமாக பேசுவார்கள். பலவிதமான அறிவுரைகளை வழங்குவார்கள். அவற்றிற்கெல்லாம் செவிமடுத்து, தனது திறமையை சந்தேகிக்கவோ, தனது பலத்தை மாற்றிக்கொள்ளவோ முயற்சிக்கக்கூடாது. அந்த தவறை நான் செய்திருக்கிறேன். எனவே அந்த தவறை புவனேஷ்வர் குமார் செய்யக்கூடாது என நினைக்கிறேன். தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து புவனேஷ்வர் குமார் செயல்பட வேண்டும் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.