#IPL2021 சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடியில் எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் மாற்றம்..?

First Published Apr 10, 2021, 6:42 PM IST

சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடியில் மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரர் ஒருவர்.
 

ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கியது. 13வது சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் சிஎஸ்கே அணி ஆடுகிறது. சிஎஸ்கே அணி, அதன் முதல் போட்டியில் இன்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொண்டு ஆடுகிறது.
undefined
கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில், இந்த சீசனில் லுங்கி இங்கிடி ஆடாததால், ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் இருப்பதால், அந்த இடத்தில் மொயின் அலியை இறக்கிவிட்டு, தொடக்க வீரராக ஆடவைக்கலாம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் நன்றாகத்தான் ஆடினார். ஆனால் லுங்கி இங்கிடி ஆடாததால் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் இருக்கிறது. 3ம் வரிசையில் ராயுடு, 4ம் வரிசையில் ரெய்னா, அதன்பின்னர் தோனி, சாம் கரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. எனவே டுப்ளெசிஸுடன் மொயின் அலியை தொடக்க வீரராக இறக்கிவிட்டால், பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக இருக்கும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
click me!