அதாவது பந்தின் வேகத்தையும் திசையையும் சரியாகக் கணித்த சாய் சுதர்சன், அதை 'பாயிண்ட்' திசையில் பவுண்டரிக்கு அனுப்ப ஒரு பவர்புல் கட் ஷாட் ஆடினார். பந்தும் அவர் நினைத்தது போலவே பவுண்டரி கோட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது. ஆனால், ஷாட்டை முழு பலத்துடன் அடித்து முடித்த அடுத்த மைக்ரோ வினாடியில், சாய் சுதர்சனின் கைகளில் இருந்த பேட் எதிர்பாராதவிதமாக நழுவியது. கையை விட்டு நழுவிய பேட், காற்றில் சுழன்றபடி நேராக விக்கெட்டின் பின்னால் இருந்த ஸ்டம்புகளை பலமாகத் தாக்கியது. ஸ்டம்பின் மீது இருந்த பெய்ல்ஸ்கள் கீழே விழுந்தன.
சாய் சுதர்சன் அவுட்டா? இல்லையா?
9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சன் இப்படி ஒரு விசித்திரமான முறையில் விக்கெட்டை பறிகொடுத்தது ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குஜராத் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் சாய் சுதர்சன் அவுட் இல்லை. நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டதாக தெரிவித்தனர். சாய் சுதர்சன் அவுட்டா? இல்லையா? என சமூக வலைத்தளங்களில் ஆர்சிபி, குஜராத் ரசிகர்கள் யுத்தமே நடத்தி வருகின்றனர்.