சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!

Published : Mar 09, 2026, 12:01 AM IST

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனதளவில் உடைந்து போயிருந்தேன். என் கனவுகள் சிதறிப்போனதாக உணர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

PREV
14
சஞ்சு சாம்சன் தொடர் நாயகன்

டி20 உலகக்கோப்பை 2026 பைனலில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் என அதிரடி அரைசதம் அடித்து அசத்தினார். 

சூப்பர் 8 சூற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முக்கியமான 97 ரன்கள் விளாசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் அரை சதம் விளாசி இருந்தார். இப்போது இறுதிப்போட்டியிலும் அரை சதம் விளாசி மொத்தமாக 321 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

24
கடினமாக உழைத்தேன்

தொடக்கத்தில் பார்ம் இன்றி தவித்த சஞ்சு சாம்சன் மீண்டும் பார்முக்கு திரும்பி மாஸ் காட்டியுள்ளார். இந்த நிலையில், தான் பார்முக்கு திரும்ப சச்சின் டெண்டுல்கர் உதவினார் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''உண்மையைச் சொல்லப்போனால், இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 

2024 உலகக் கோப்பை அணியில் நான் இருந்தபோது, எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நான் தொடர்ந்து கற்பனை செய்து பார்த்தேன், கடினமாக உழைத்தேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

34
சச்சின் எனக்கு உதவினார்

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனதளவில் உடைந்து போயிருந்தேன், என் கனவுகள் சிதறிப்போனதாக உணர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுளுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. கனவு காண்பதற்கான துணிச்சல் என்னிடம் இருந்ததால் எனக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. பல முன்னாள் வீரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உதவினார்கள்.

கடந்த சில மாதங்களாக நான் சச்சின் சாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். நான் அவரிடம் பேசி நீண்ட உரையாடல்களை நடத்தினேன். அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதை விட வேறு என்ன பெரிய விஷயம் இருக்க முடியும்? எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

44
பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக் கோப்பையின் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரே உலகக் கோப்பை தொடரில் வேறு எந்த வீரரும் இத்தனை சிக்ஸர்களை அடித்ததில்லை.

இதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பையின் ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சஞ்சு தன்வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம், விராட் கோலியின் 12 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார். சஞ்சு வெறும் ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories