2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் தென்னாப்பிரிக்கா வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக ஹான்சி குரோன்யே தலைமையில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரை வென்றது. அந்தப் பட்டியலில் தற்போது டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
இந்த ஆட்டத்துக்கு பிறகு பேசிய பவுமா, ''இந்தியாவுக்கு வந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. ஒரு குழுவாக நாங்கள் சிறந்த நாட்களைக் கடந்து வந்துள்ளோம்.
இது எங்களுக்கு மற்றொரு நம்பமுடியாத சாதனை. இந்த தொடருக்கு நாங்கள் முன்பே திட்டமிட்டோம். அதற்கு ஏற்ப தயாரானோம். வீரர்கள் அணிக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதில் தெளிவாக இருந்தனர். ஒரு அணியாக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம்'' என்றார்.