#IPL2021Auction மேக்ஸ்வெல்லுக்காக முட்டி மோதிய சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள்..! கடைசியில் தட்டி தூக்கியது எந்த அணி

Published : Feb 18, 2021, 03:39 PM IST

ஆஸி.,யின் அதிரடி ஆல்ரவுண்டரான க்ளென் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கேவுடன் கடும் போட்டியிட்டு ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி.  

PREV
13
#IPL2021Auction மேக்ஸ்வெல்லுக்காக முட்டி மோதிய சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள்..! கடைசியில் தட்டி தூக்கியது எந்த அணி

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.
 

23

ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன.
 

ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன.
 

33

கடந்த சீசனில் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல்லுக்காக, இம்முறை சிஎஸ்கேவும் ஆர்சிபியும் கடும் போட்டியிட்டதால் அவரது விலை உயர்ந்துகொண்டே சென்றது. கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது. அண்மையில் மேக்ஸ்வெல், விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் ஆர்சிபியில் ஆடும் தனது ஆர்வத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் விரும்பியபடியே அவரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 

கடந்த சீசனில் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல்லுக்காக, இம்முறை சிஎஸ்கேவும் ஆர்சிபியும் கடும் போட்டியிட்டதால் அவரது விலை உயர்ந்துகொண்டே சென்றது. கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது. அண்மையில் மேக்ஸ்வெல், விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் ஆர்சிபியில் ஆடும் தனது ஆர்வத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் விரும்பியபடியே அவரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 

click me!

Recommended Stories