யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் – கேகேஆர் பவுலர்களுக்காக பரிதாப்பட்ட அஸ்வின்!

Published : Apr 27, 2024, 11:10 AM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அதிரடியாக விளையாடி 18.4 ஓவர்களில் 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
14
யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் – கேகேஆர் பவுலர்களுக்காக பரிதாப்பட்ட அஸ்வின்!
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 42ஆவது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது.

24
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match

இதில் அதிகபட்சமாக 71 ரன்களும், பிலிப் சால்ட் 75 ரன்களும் எடுத்தனர். வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரே ரஸல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்ட்வோ இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

34
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match

பிராப்சிம்ரன் சிங் 54 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். ரிலீ ரோஸோவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஷஷாங்க் சிங் இருவரும் கடைசி வரை அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க, பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

44
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match

இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories