48 பந்துகளில் தனது சதத்தை விளாசிய குர்பாஸ் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு, 2010-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக முகமது ஷஷாத் மற்றும் 2012-ல் நெதர்லாந்துக்கு எதிராக கரீம் சாதிக் ஆகியோர் 72 பந்துகளில் சதம் அடித்ததே ஆப்கானிஸ்தான் அணியின் அதிவேக ஒருநாள் சதமாக இருந்தது.
அந்த 14 ஆண்டுகால சாதனையை குர்பாஸ் தற்போது தகர்த்துள்ளார். குர்பாஸின் இந்த மிரட்டலான இன்னிங்ஸ் ஆப்கானிஸ்தான் சாதனை மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.
ஷாகித் அப்ரிடிக்கு அடுத்த இடம்
கடந்த 2005-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 45 பந்துகளில் சதமடித்ததே இன்றும் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 2013-ல் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஃபாக்னர் மற்றும் 2015-ல் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக 57 பந்துகளில் அடித்த சதங்களை முறியடித்து, தற்போது குர்பாஸ் (48 பந்துகள்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.