இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு புது அத்தியாயத்தை எழுதியுள்ளார். வயது என்பது வெறும் நம்பர் தான் என்று அவர் நிரூபித்துள்ளார். அதாவது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய மிக வயதான வீரர் என்ற பெருமையை இன்று தரம்சாலாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ரோகித் பெற்றார்.
39 வயதில் ரோகித் சாதனை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர் ஃபார்மெட்டில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்ததன் மூலம், இன்னும் விளையாட விரும்புவதாகவும், அணிக்காக ரன் குவித்து வெற்றி தேடித் தர விரும்புவதாகவும் ரோஹித் உணர்த்தியுள்ளார். 39 வருடம் 44 நாட்கள் வயதில், மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா இந்திய ஜெர்சியில் களமிறங்கினார்.
இதன் மூலம், கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ஒரு சாதனை தகர்க்கப்பட்டது. இதுவரை இந்த சாதனை முன்னாள் இந்திய வீரர் மொஹிந்தர் அமர்நாத் வசம் இருந்தது. அவர் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியபோது அவருக்கு வயது 39 வருடம் 36 நாட்கள். இப்போது அந்த சாதனையை 'ஹிட்மேன்' முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.