IND vs AUS: வெற்றி தோல்வி என்பது ஒருவர் கையில் இல்லை; நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் – பிரதமர் மோடி!

Published : Nov 21, 2023, 10:21 AM ISTUpdated : Nov 21, 2023, 10:51 AM IST

உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, இந்திய வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

PREV
113
IND vs AUS: வெற்றி தோல்வி என்பது ஒருவர் கையில் இல்லை; நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் – பிரதமர் மோடி!
ரோகித் சர்மா - விராட் கோலி

இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.

டிரெஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம்!

https://youtu.be/6-F-WDOUasE

213
ரவீந்திர ஜடேஜா

இந்த தொடரில் இந்தியா விளையாடிய 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

IND vs AUS: துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்த பிளேயர்ஸ், சுருண்டு விழுந்த நிலை! கலையிழந்து காணப்பட்ட ஓய்வறை!

313
ராகுல் டிராவிட்

இதையடுத்து நடந்த அரையிறுதில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

ஹோம் டீம் தான் டிராபியை கைப்பற்றும் என்ற டிரெண்டை உடைத்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன்!

413
நரேந்திர மோடி

கடந்த 19 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியை பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்து ரசித்தார்.

சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு? இந்தியால வந்து கோடி கோடியா அள்ளிட்டு போகும் ஆஸ்திரேலியா!

513
பிரதமர் மோடி

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது.

வினி ராமனையும் விட்டு வைக்காத வன்ம கும்பல்... மேக்ஸ்வெல் மனைவியை டார்கெட் செய்து மிரட்டல்!

613
ஜஸ்ப்ரித் பும்ரா

அதுமட்டுமின்றி இந்திய அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்தியா 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

713
டீம் இந்தியா

இந்த நிலையில் ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்திய ரூபாய் மதிப்பில் ஆஸ்திரேலியாவிற்கு ரூ.33 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

813
உலகக் கோப்பை 2023

இதே போன்று 2ஆவது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.16 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அரையிறுதியோடு வெளியேறிய நியூசிலாந்திற்கு ரூ.6.5 கோடியும், தென் ஆப்பிரிக்காவிற்கு ரூ.6 கோடி வரையிலும் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

913
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023

இது தவிர லீக் போட்டிகளுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு தலா 86 லட்சம் ரூபாய் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு போட்டிக்கு ரூ.33 லட்சம் வரையில் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

1013
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி

இந்தியாவிற்கு எதிராக நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ரூ.33 கோடியை பரிசுத் தொகையாகவும் அள்ளிச் சென்றது.

1113
ரோகித் சர்மா

இந்த நிலையில், இந்திய அணியினரின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி, ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா என்று ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி தனது ஆறுதலை கூறியுள்ளார்.

1213
விராட் கோலி

உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

1313
ரவீந்திர ஜடேஜா

நாங்கள் ஒரு சிறந்த போட்டியைக் கொண்டிருந்தோம், ஆனால் நேற்று குறுகிய காலத்தில் போட்டி முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம், ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து வழி நடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்தது சிறப்பானது மற்றும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories