பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை அந்த நாட்டின் முன்னாள் வீரர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். "நாட்டின் கிரிக்கெட் வலிமையை உலகுக்குக் காட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கிறது, அதை நீங்கள் வீணடித்துவிட்டீர்கள். டி20 இப்போது ஒரு முறையான ஆட்டமாகிவிட்டது, ஆனால் நமது வீரர்கள் மற்ற அணிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை" என்று ஜாவேத் மியான்தத் கடுமையாக சாடினார்.
நம்மால் கோப்பையை வெல்ல முடியாது
"சில வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனாலும் அவர்கள் பெரிய தொடர்களில் தோல்வியடைகிறார்கள். இப்போதாவது நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசுப் தெரிவித்துள்ளார். ''உயர்மட்ட அணிகளைத் தோற்கடிக்கும் திறன் இல்லையென்றால், நம்மால் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாது. நமது முக்கிய வீரர்கள் உலகக் கோப்பையில் ஜொலிக்கவே இல்லை" என்று முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறியுள்ளார்.