இந்நிலையில், பதிரனா குறித்து பேசிய முரளி கார்த்திக், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் தீக்ஷனாவிற்கு பதிலாக மிட்செல் சாண்ட்னெர் ஆடலாம். பதிரனா டெத் ஓவர்களை அருமையாக வீசுகிறார். தோனியின் வழிகாட்டுதலில் மிகச்சிறந்த பவுலராக வளர்ந்துவருகிறார் பதிரனா. தோனி நினைப்பதை போன்று பதிரனா பந்துவீசி அசத்துகிறார். அதனால் பதிரனாவை ரிமோட் கன்ட்ரோல் போல் தோனி பயன்படுத்துவதாக முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.