மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 214 ரன்களை குவித்தது. 215 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இஷான் கிஷன் 41 பந்தில் 75 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 66 ரன்களையும் குவிக்க, அதன்பின்னர் திலக் வர்மா 10 பந்தில் 26 ரன்கள் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்.