அதற்கு காரணம், இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சில திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மிகச்சிறந்த ஃபாஸ்ட்பவுலர்கள் சிஎஸ்கேவிற்கு கிடைத்துள்ளனர். தீபக் சாஹர் இல்லாத குறையை, பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி தீர்த்துவைத்தார் இடது கை ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரி. அவருடன் இணைந்து மற்றொரு இளம் ஃபாஸ்ட் பவுலரான சிமர்ஜீத் சிங்கும் அருமையாக பந்துவீசினார். எனவே அடுத்த சீசனில் தீபக் சாஹருடன் இவர்களும் இணையும்போது, சிஎஸ்கே அணி கூடுதல் பலம்பெறும்.