#AUSvsIND மொத்த பேரோட கருத்திலும் முற்றிலும் முரண்படும் மைக் ஹசி..! என்ன நடந்தாலும் அவரை மட்டும் தூக்கக்கூடாது

First Published Dec 22, 2020, 3:32 PM IST

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்டில் பிரித்வி ஷாவை தூக்கக்கூடாது; அவரையே ஆடவைக்க வேண்டும் என்று மைக் ஹசி கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.
undefined
குறிப்பாக தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டனர். மயன்க் அகர்வாலாவது பரவாயில்லை; பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான விதம் அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
undefined
பிரித்வி ஷாவின் தற்போதைய மோசமான ஃபார்ம் மற்றும் மோசமான பேட்டிங் டெக்னிக்கை சுட்டிக்காட்டி, அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை அடுத்த போட்டியில் தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். தொடக்க வீரரை மாற்ற வேண்டும் என்ற கருத்தை கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்களும் வலியுறுத்தியுள்ளனர்.
undefined
ஆனால் பிரித்வி ஷாவையே தொடர்ந்து தொடக்க வீரராக ஆடவைக்க வேண்டும் என்று ஆஸி.,யின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் மைக் ஹசி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மைக் ஹசி, இந்திய அணி தேர்வாளர்கள் பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு டெஸ்ட்டில், அதுவும் தரமான பவுலிங் யூனிட்டிற்கு எதிராக சரியாக ஆடாததற்கெல்லாம் அணியிலிருந்து நீக்கக்கூடாது. முதல் தர கிரிக்கெட்டில் 7க்கும் குறைவான சராசரியை வைத்துள்ள ஜோ பர்ன்ஸ் மீது ஆஸி., அணி தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்து அவரை அணியில் எடுத்து தொடக்க வீரராக இறக்கிவிட்டனர். முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை என்றாலும், 2வது இன்னிங்ஸில் பர்ன்ஸ் அரைசதம் அடித்தார். எனவே பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைத்து, இந்திய அணி தேர்வாளர்கள் அடுத்த போட்டியிலும் அவரையே ஆடவைக்க வேண்டும் என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
undefined
click me!