மாயங்க் யாதவ் ஐபிஎல் வரலாறு:
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மாயங்க் யாதவ்வை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. ஆனால், அந்த சீசன் முழுவதும் காயம் காரணமாக மாயங்க் யாதவ் அந்த தொடரில் இடம் பெறவில்லை. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் எண்ட்ரி கொடுத்தார். இந்தப் போட்டியில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். இந்த தொடரில் வெறும் 4 போட்டிகளில் விளையாடிய மாயங்க் யாதவ் மொத்தமாக 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக 3/14 உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா மற்றும் மாயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 11.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.