இதனைத் தொடர்ந்து உலகமே எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த போட்டியை பலரும் ஆர்வமாக எதிர்பார்க்கும் நிலையில், ஒரு சிலர் பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடக் கூடாது என தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்காது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், பாஜக தலைவருமான கேதர் ஜாதவ், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.