இந்திய அணி தடுமாற்றம்.. கருண் நாயர் போட்ட சர்ச்சை ட்வீட்.. கவுதம் கம்பீர் ஷாக்!

Published : Nov 24, 2025, 10:41 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட கருண் நாயர் போட்ட சர்ச்சை ட்வீட் வைராலாகி வருகிறது.

PREV
13
இந்திய அணி தடுமாற்றம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களுக்கு சுருண்டது. 314 ரன்கள் பின்னிலையில் தோல்வியை நோக்கி சென்று வருகிறது. பேட்டிங் பிட்ச்சில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் என அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள்.

23
கருண் நாயர் போட்ட ட்வீட்

இந்திய அணியின் மோசமான செயல்பாடுகளுக்காக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என பலவரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி வீரர் கர்நாடகாவை சேர்ந்த கருண் நாயர் தனது X கணக்கில் ஒரு பதிவை பக்மிர்ந்துள்ளார். "சில சூழ்நிலைகள் உங்களுக்கு மனப்பாடம் செய்த அனுபவத்தைத் தருகின்றன.மேலும் களத்தில் இல்லாததன் மௌனம் அதன் சொந்த வலியைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

33
கருண் நாயர் அணியில் இருந்து நீக்கம்

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருண் நாயர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர், 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தார், இதைத் தொடர்ந்து, கருண் நாயர் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கருண் நாயரின் பதிவு வைரல்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கருண் நாயரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கருண் நாயருக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் துருவ் ஜூரெலுக்கு பதில் இவரை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories