ஒருநாள் அணியிலிருந்தும் ஒதுங்கும் பும்ரா..! ரசிகர்கள் அதிர்ச்சி

First Published Mar 2, 2021, 3:30 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் ஒதுங்கிறார் இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ரா.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிந்துவிட்டன. கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துவிட்டு ஒதுங்கினார் பும்ரா.
undefined
டெஸ்ட் தொடருக்கு பின் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடரிலிருந்தும் பும்ரா விலகினார். டி20 தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் லீட் செய்வார். நடராஜன், சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர்.
undefined
டி20 தொடரை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. வரும் 23ம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரிலும் பும்ரா ஆடமாட்டார் என்று தெரிகிறது. எனவே ஒருநாள் தொடரிலும் டி20 தொடரில் ஆடும் அதே ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான் ஆடும். இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலரான பும்ரா, டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் ஆடாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
undefined
click me!