அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஜே.எஸ். ஸ்ரீனிவாச ராவ், தலைமை நிர்வாக அதிகாரி சுனில் காண்டே, ஸ்ரீ சக்ரா கிரிக்கெட் கிளப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திர யாதவ் மற்றும் ஸ்ரீ சக்ரா கிரிக்கெட் கிளப்பின் தலைவர் ஜி. கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
"நிதி மோசடி, தவறான நிர்வாகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார். ஐபிஎல் 2025 சீசனின் போது ராவ் மற்றும் பலர் மீது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிஐடி காவலில் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சன்ரைசர்ஸ் நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னதாக, ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) இடையே பெரும் மோதல் மூண்டது.
அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் ஹைதராபாத் மைதானத்தை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிரட்டல் விடுத்து இருந்தது.
எச்.சி.ஏ தலைவர் ஜெகன்மோகன் ராவ் டிக்கெட் பாஸ்களுக்காக தங்களை கடுமையாக துன்புறுத்துவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது.