4-5 வருடங்கள் இருளில் இருந்தவர் – மன போராட்டங்கள் குறித்து ஓபனாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

Published : Dec 03, 2023, 12:52 PM IST

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருளில் இருந்தது குறித்தும், தனது மன போராட்டங்கள் குறித்தும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

PREV
15
4-5 வருடங்கள் இருளில் இருந்தவர் – மன போராட்டங்கள் குறித்து ஓபனாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
Ravichandran Ashwin

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.  இதுவரையில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

25
Ravichandran Ashwin

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், தனது வாழ்க்கையில் இருண்ட பக்கம் குறித்தும் தனது மன போராட்டம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தனது மன நலத்துடன் போராடியதாக கூறினார். மேலும், ஒவ்வொரு சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை அந்த தருணங்களில் உணர்ந்ததாக கூறினார்.

35
Ravichandran Ashwin

நான் ஒன்றும் ராஜதந்திரி கிடையாது. ஆனால், நான்கைந்து ஆண்டுகளாக வாழ்க்கையில் இருளில் இருந்ததாக உணர்ந்தேன். மன ஆரோக்கியத்திற்கும் உதவி செய்தேன். இருளில் எந்த சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

45
Ashwin Cricket Career

மேலும், தனது எதிர்காலம் குறித்தும் பேசினார். கிரிக்கெட்டிற்குப் பிறகு வாழ்க்கையை தேடுவதாக அவர் கூறினார். மேலும், அவரது ஓய்வு குறித்து பேசுகையில், பவுலிங் அல்லது பேட்டிங்கில் வெறுப்படையும் நிலையில் தனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கிரிக்கெட்டிற்கு பிறகு வாழ்க்கைக்கு தயாராகி வருகிறேன். ஆனால், நான் எனது கிரிக்கெட்டில் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். பேட்டிங்கிலும் எனது பங்களிப்பை அளித்த நான், அமெரிக்கா சென்று பேஸ்பால் பயிற்சி செய்தேன்.

55
Ravichandan Ashwin

எப்போது எனக்கு பேட்டிங் மற்றும் பயிற்சியில் எரிச்சல் ஏற்படுகிறதோ, அப்போது நான் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது மனநலப் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசுகின்றனர். இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், விராட் கோலி கூட தங்களது இருண்ட பக்கம் குறித்து கூறியிருந்தனர். தற்போது அந்த பக்கத்தை கடந்து வந்து வலுப்பெற்று வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories