மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய மற்ற வீரர்களை விட இஷான் கிஷனுக்கே கேப்டன் கில் முன்னுரிமை கொடுப்பார் எனத் தெரிகிறது. சமீபத்தில் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காகவும் இதே பேட்டிங் பொசிஷனில் அவர் சிறப்பாக விளையாடினார். துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 5-வது இடத்திலும் பேட்டிங் செய்வார்கள்.
ஸ்டார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அவர் இல்லாததால், 6-வது இடத்தில் இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஸ்பின் ஆல்-ரவுண்டராக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவுடன் இணைந்து சுழற்பந்துவீச்சுப் பொறுப்பை ஏற்பார். குல்தீப் யாதவ் இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பாஸ்ட் பவுலிங் எப்படி?
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் இல்லாததால், இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சுக்கு அர்ஷ்தீப் சிங் தலைமை தாங்குவார். அவருடன் பிரசித் கிருஷ்ணா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பிரின்ஸ் யாதவ் அல்லது குர்னூர் பிரார் ஆகியோரில் யாருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்பது சுவாரஸ்யமாகியுள்ளது. இதில் டெல்லி பவுலர் பிரின்ஸ் யாதவுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கலாம்.