IND vs SA: இந்திய அணி 201 ரன்னில் சுருண்டது.. படுமோசமான பேட்டிங்.. இந்த 3 வீரர்கள் தான் மெயின் காரணம்!

Published : Nov 24, 2025, 04:46 PM IST

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 314 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3 பேட்ஸ்மேன்கள் அடித்த தவறான ஷாட் பேட்டிங் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகி விட்டது. 

PREV
14
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பேட்டிங் செய்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. 

அந்த அணி வீரர் முத்துசாமி சூப்பர் சதம் (109 ரன்கள்) விளாசினார். மார்கோ யான்சன் அதிரடியாக 91 பந்தில் 7 சிக்சர்களுடன் 93 ரன்கள் நொறுக்கினார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

24
இந்திய அணி படுமோசமான பேட்டிங்

பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் (2), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7) ஆகியோர் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து ஆடியது.

 முதல் விக்கெட்டுக்கு இருவரும் 65 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.கே.எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்து கேசவ் மகாராஜ் பவுலிங்கில் எய்டன் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

துருவ் ஜூரல், ரிஷப் பண்ட் தவறான ஷாட்

சூப்பராக விளையாடி அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் (58 ரன்) சைமன் ஹார்மர் பந்தில் அவுட் ஆனார். இதன்பின்பு இந்திய அணியின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. சாய் சுதர்சன் (15) ஹார்மரின் ஷாட் பாலில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இளம் வீரர் துருவ் ஜூரல் ரன் எதும் எடுக்காமல் யான்சனின் ஷார்ட் பிட்ச் பந்தில் படுமோசமான ஷாட் அடித்து வெளியேறினார். பின்னர் கேப்டன் ரிஷப் பண்ட்டும் (7) யான்சன் பந்தில் தேவையில்லாமல் இறங்கி வந்து அவுட் ஆனார்.

34
201 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்

நிதிஷ் குமார் ரெட்டியும் (10) மார்க்கரமின் சூப்பர் கேட்ச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் (6) உடனே வெளியேற இந்திய அணி 122 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த . வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். சில பவுண்டரிகளை விரட்டிய வாஷிங்டன் (48 ரன்) ஹார்மர் பந்தில் கேட்ச் ஆனார். 

இருவரும் 70 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இதன் பின்பு, 134 பந்துகளை எதிர்கொண்ட குல்தீப் யாதவ் (19), பும்ரா (5) வெளியேற இந்திய அணி 83 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட் ஆகிய 3 பேரும் மிக மோசமன ஷாட்டால் அவுட்டானது பேட்டிங் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

44
314 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா தரப்பில் அட்டகாசமாக பந்துவீசி பவுன்ஸ் மூலமாக இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்த மார்கோ யான்சன் 19.5 ஓவரில் 48 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 90 ரன்களுக்கு மேல் பாலோ ஆன் ஆன நிலையில் பாலோ ஆன் கொடுக்காமல் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. 

ரிக்கல்டன் (13), மார்க்ரம் (12) களத்தில் உள்ளனர். அந்த அணி இந்தியாவை விட 314 ரன்கள் முன்னிலையில் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 2வது டெஸ்டில் தென்னாப்பிக்கா வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories