#AUSvsIND டெஸ்ட்: 244 ரன்களுக்கு சுருண்ட இந்தியா.! நாங்க மட்டும் என்ன சொம்பையா? கெத்து காட்டிய பும்ரா, அஷ்வின்

First Published Dec 18, 2020, 1:01 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 244 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றி கெத்து காட்டினார் பும்ரா.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி, முதல் இன்னிங்ஸில் வெறும் 244 ரன்களுக்கு சுருண்டது.
undefined
இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டான நிலையில், மயன்க் அகர்வால் 17 ரன்களுக்கும் புஜாரா 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கோலி 74 ரன்களுக்கு ரன் அவுட்டாகி சத வாய்ப்பை இழந்தார். ரஹானே 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரி பதினாறு ரன்களுக்கு நடையை கட்டினார். 89 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி. முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் களத்தில் இருந்த அஷ்வினும் சஹாவும் இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இன்று வெறும் நான்கரை ஓவர்களில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வெறும் 11 ரன்களுக்கு இழந்த இந்திய அணி 244 ரன்களுக்கு சுருண்டது.
undefined
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் தலா 7 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆடினர். ஆனாலும் அவர்களை நிலைக்கவிடாமல் தனது அடுத்த ஓவர்களில் வேட் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்தினார். இன்னிங்ஸின் பதினைந்தாவது ஓவரில் மேத்யூ வேடை 8 ரன்களுக்கு வீழ்த்திய பும்ரா, தான் அடுத்து வீசிய 17வது ஓவரில் பர்ன்ஸையும் 8 ரன்களுக்கு வீழ்த்தினார். இந்திய அணியை ஆஸ்திரேலியா 244 ரன்களுக்கு சுருட்டிய நிலையில், ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றி கெத்து காட்டினார் பும்ரா.
undefined
இதையடுத்து ஸ்மித்தும் லபுஷேனும் ஜோடி சேர்ந்து ஆடிய நிலையில், ஸ்மித்தை வெறும் ஒரு ரன்னுக்கு வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். ஆஸ்திரேலிய அணி 45 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
undefined
click me!