இதற்கிடையே இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் நாளை (ஆகஸ்ட் 23) ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் தொடங்க உள்ள நிலையில், குல்தீப் யாதவ் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு பதில் அளித்துள்ள இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் குல்தீப் யாதவ் மேல் எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர் சொன்ன அதிரடி பதில்
இது தொடர்பாக பேசிய கம்பீர், ''குல்தீப் எவ்வளவு திறமையான பந்துவீச்சாளர் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும். ஒரு ரிஸ்ட் ஸ்பின்னரா, விக்கெட் எடுக்க வேண்டும் என ரொம்ப பதற்றப்பட்டா, கண்ட்ரோல் போயிடும். அதனால் விக்கெட் எடுக்க வேண்டும் என நினைக்கணுமே தவிர, அதுக்காகப் பதற்றப்படக் கூடாது என அவரிடம் சொல்லியிருக்கேன்'' என்றார்.
தொடந்து பேசிய அவர், ''குல்தீப் மேல் எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கு. அவர் எவ்வளவு வெற்றிகரமான பந்துவீச்சாளர் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனாலும், இந்த கண்டிஷனுக்கு எது சிறந்த பந்துவீச்சு கூட்டணியோ, அதைத்தான் தேர்வு செய்வோம்'' என்று கூறியுள்ளார்.