இந்தியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, அரைசதம் அடித்ததுடன், அக்சர் படேலின் முக்கியமான கேட்ச்சை பிடித்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய பவுமா, ''இதுபோன்ற போட்டிகளின் ஒரு பகுதியாக இருக்கவே நீங்கள் விரும்புவீர்கள், குறிப்பாக வெற்றிப் பக்கத்தில் இருக்கும்போது. எங்களால் முடிந்தவரை களத்தில் உறுதியாக நிற்க முயற்சித்தோம். பேட்டிங்கில் இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்; அது எங்களுக்குக் கடினமாக இருந்தது.
இந்த பார்னர்ஷிப் தான் முக்கியம்
ஆனால் கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. எங்கள் வீரர்கள் அதை அழகாகச் செய்தார்கள். அதிர்ஷ்டவசமாக, விஷயங்கள் நன்றாகவே அமைந்தன. எங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், போஷ் உடனான பார்ட்னர்ஷிப், இறுதியில் மார்கோவுடனும் சிறிது நேரம் ஆடியது. இன்று காலை நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாட ஒரு உத்வேகத்தை அளித்தது'' என்றார்.