IND vs ENG: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! கம்பீர், ஷ்ரேயாஸ் பதவி காலி? சாட்டையை எடுக்கும் BCCI

Published : Jul 10, 2026, 02:54 PM IST

IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை BCCI ஆய்வு செய்ய உள்ளது. பயிற்சியாளர் கெளதம் கம்பீர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.

PREV
14
டி20 தொடரில் இந்திய அணி படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், அணியின் செயல்பாடுகள் குறித்து அவசர ஆய்வை நடத்த BCCI தயாராகி வருகிறது. தொடரின் நான்காவது போட்டியிலும் படுமோசமாகத் தோற்றதால், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை BCCI விரிவாக ஆய்வு செய்யும் என வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சாம்பியனாக இருந்தும், இந்திய அணி சந்திக்கும் இரண்டாவது தொடர் தோல்வி இதுவாகும்.

24
பயிற்சியாளர் கெளதம் கம்பீர், ஷ்ரேயாஸ் பதவிக்கு சிக்கல்

இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக, அயர்லாந்துக்கு எதிரான தொடரிலும் இந்தியா மோசமாகத் தோற்றது. கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக அயர்லாந்திடம் இந்தியா ஒரு தொடரை இழந்தது. அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயரை புதிய கேப்டனாக நியமித்த BCCI-யின் இந்த முயற்சிக்கு, இந்த தொடர் தோல்விகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. 

இதனால், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவியும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. 2027 வரை அவருக்கு ஒப்பந்தம் இருந்தாலும், சமீபத்திய மோசமான ஆட்டம் கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. இதேபோல் ஷ்ரேயாஸ் பொறுப்பேற்றத்தில் இருந்து 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் ஷ்ரேயாஸ் பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது.

34
3வது டி20 போட்டியில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்

பிரிஸ்டலில் நடந்த நான்காவது டி20 போட்டியில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் 202 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி, வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

44
4வது டி20 போட்டியில் படுமோசமான தோல்வி

நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் போராடினாலும், மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து, மிக எளிதாக இலக்கை எட்டியது. வெறும் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அவர்கள் வெற்றி பெற்றனர்.

கேப்டன் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 79 ரன்களும், ஃபில் சால்ட் 42 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடரை இழந்த நிலையில், கடைசிப் போட்டியிலாவது வென்று மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா முயற்சிக்கும். ஆனால், தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories