ஆனால் ஷார்ட் பிட்ச் பந்துகளை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் திணறினார் ரெய்னா. ரெய்னாவின் பலவீனம் ஷார்ட் பிட்ச் பந்துகள் தான் என்பதை அறிந்த எதிரணிகள், அவரை ஷார்ட் பிட்ச் பந்துகளின் மூலம் வீழ்த்த ஆரம்பித்தனர். தனது பலவீனம் என்னவென்பதை தெரிந்தும் கூட, ரெய்னாவால் அதை சரிசெய்ய முடியவில்லை. அதன்விளைவாக, 2018ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தோனியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ரெய்னா.