தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!

Published : Dec 08, 2025, 07:52 PM IST

IND vs SA T20: இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இரண்டு மெகா சாதனை படைக்க தயாராக உள்ளார்.

PREV
13
இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் நாளை (டிசம்பர் 9) தொடங்குகிறது. முதல் டி20 போட்டி கட்டாக்கில் நாளை நடைபெற உள்ளது. இரண்டாவது T20I போட்டி டிசம்பர் 11 அன்று முல்லன்பூரில் நடைபெறும். மூன்றாவது T20I போட்டி டிசம்பர் 14 அன்று தர்மசாலாவிலும், நான்காவது போட்டி டிசம்பர் 17 அன்று லக்னோவிலும் நடைபெறும். இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி டிசம்பர் 19 அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

23
ஹர்திக் பாண்ட்யாவின் மெகா சாதனை

டெஸ்ட் தொடரில் தோல்வி கண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இதேபோல் டி20 தொடரையும் கைப்பற்ற ஆயத்தமாகி உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்கா T20I தொடரில், 2,000 T20I ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் என்ற இரட்டை மைல்கல்லை எட்ட உள்ளார். அதாவது பாண்ட்யா இந்த தொடரில் 2000 T20 ரன்களை நிறைவு செய்ய 140 ரன்கள் தொலைவிலும், 100 விக்கெட்டுகளை வீழ்த்த இரண்டு விக்கெட்டுகள் தொலைவிலும் உள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர்

T20I போட்டிகளில் பாண்ட்யா 100 விக்கெட்டுகளை நிறைவு செய்தால், இந்த சாதனையை எட்டும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது, அவர் 26.58 சராசரியில் 98 விக்கெட்டுகளுடன், குறுகிய வடிவ போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக உள்ளார். மறுபுறம், 120 போட்டிகளில், பாண்டியா 27.35 சராசரியுடன் 1860 ரன்களையும், 141.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஐந்து அரை சதங்களையும் அடித்துள்ளார்.

33
காயத்தில் இருந்து மீண்ட பாண்ட்யா

செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பை 2025 போட்டியின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பு காயத்திற்குப் பிறகு பாண்டியா போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியையும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரையும் அவர் தவறவிட்டார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) பரோடா அணிக்காக விளையாடி தனது உடற்தகுதியை பாண்ட்யா நிரூபித்தார்.

பஞ்சாப்பிற்கு எதிராக 42 பந்துகளில் 77 ரன்கள் அடித்து, பரோடா அணிக்கு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைத் தேடித் தந்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தக்கூடிய ஒரு முக்கிய வீரர் என்பதால் பாண்ட்யா வருகை இந்திய அணிக்கு பெரும் பலன் என்பதில் சந்தேகமில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories