அதாவது ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்குவார்கள். ஒன்டவுனில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களம் காண்பார். மிடில் வரிசையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரும், பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் ஆகியோரும் பேட்டிங் செய்ய உள்ளனர்.
ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை அக்சர் படேல், குல்தீப் யாதவ், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும், பாஸ்ட் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் இவர்களின் உதவிக்கு ஹர்திக் பாண்ட்யா இருப்பார்கள்.
ஹர்சித் ராணா அதிரடி நீக்கம்
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் கவுதம் கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளது மீடியம் பாஸ்ட் பவுலிங் மற்றும் மிடில் வரிசை பேட்டிங் ஆகியவற்றை பலப்படுத்தியுள்ளது.