பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்யும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 15வது சீசனில் தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்தார். ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.