இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், தொடக்க ஜோடி தான் மிக முக்கியம். ஒரு தொடரின் போக்கை தீர்மானிப்பதே தொடக்க வீரர்கள் தான். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும். ஷுப்மன் கில் வேற லெவல் ஃபார்மில் உள்ளார். கேஎல் ராகுலும் டாப் பிளேயர் தான். ஆனால் கில் இப்போதிருக்கும் ஃபார்மிற்கு அவர் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். அண்மைக்காலத்தில் நிறைய ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.