Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் அணி இதுதான்! க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு!

Published : May 29, 2026, 03:51 PM IST

Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை இந்த அணி தான் வெல்லும் என க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பு

ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளும். ஃபைனலுக்கு நுழையும் அணி எது, கோப்பையை வெல்லும் அணி எது என்பது குறித்து பலர் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் க்ரோக் AI ஒரு அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளது.

24
ஆர்சிபி தான் கோப்பை வெல்லும்

அதாவது எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் க்ரோக் AI-யிடம் ஒரு கேள்வி கேட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய மூன்று அணிகளில், இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியின் புகைப்படத்தை நீக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு க்ரோக் AI, ஆர்சிபி புகைப்படத்தை நீக்கி, 'இந்த முறை ஆர்சிபி தான் கோப்பையை வெல்லும்' என காரணத்துடன் பதிலளித்துள்ளது.

'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும். அந்த அணியின் பலம், அனுபவம், மற்றும் எனர்ஜி அபாரமானது. ராஜஸ்தான், குஜராத் அணிகள் ஆபத்தானவை என்றாலும், இந்த முறை ஆர்சிபி-யுடன் போட்டிபோட முடியாது. ஆர்சிபி தான் கோப்பையை வெல்லும்' என க்ரோக் AI கூறியுள்ளது.

34
பலம்வாய்ந்த ஆர்சிபி அணி

இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே ஆர்சிபி அணி, வெற்றி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அணி மிகவும் பேலன்ஸாக உள்ளதுடன், ஒவ்வொரு வீரரும் பங்களிக்கின்றனர். அணி ஒரு வீரரை மட்டுமே நம்பி இல்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2-வது குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன.

இரண்டுமே பலமான அணிகள். ஒருபுறம் கில், பட்லர், சாய் சுதர்ஷன் என்றால், மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் என அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால், இன்று மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறும். மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்சிபி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் இப்போதே அகமதாபாத் பயணத்தை தொடங்கிவிட்டனர்.

44
பொறுப்பு துறப்பு

இந்த செய்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எக்ஸ் (X) தளத்தின் 'க்ரோக் AI' (Grok AI) வெளியிட்ட கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் தகவல் பகிர்வுக்கான செய்தி மட்டுமே. AI கணிப்புகள் அனைத்தும் கடந்த கால தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அவை 100% துல்லியமானவை என்று கூற முடியாது. கிரிக்கெட் என்பது கடைசி பந்து வரை திருப்பங்கள் நிறைந்த ஒரு விளையாட்டு என்பதால், போட்டியின் உண்மையான முடிவு களத்தில் வீரர்களின் அன்றைய ஆட்டத்திறனை பொறுத்தே அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories