இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே ஆர்சிபி அணி, வெற்றி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அணி மிகவும் பேலன்ஸாக உள்ளதுடன், ஒவ்வொரு வீரரும் பங்களிக்கின்றனர். அணி ஒரு வீரரை மட்டுமே நம்பி இல்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2-வது குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன.
இரண்டுமே பலமான அணிகள். ஒருபுறம் கில், பட்லர், சாய் சுதர்ஷன் என்றால், மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் என அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால், இன்று மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறும். மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்சிபி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் இப்போதே அகமதாபாத் பயணத்தை தொடங்கிவிட்டனர்.