டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி வீரர்களை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இடையேயான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அபிஷேக் சர்மாவிடம் பேசிய கவுதம் கம்பீர்
அதாவது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய வீரர்கள் பின்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு அணியின் பேருந்தில் சென்றனர். அப்போது டிரைவருக்குப் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் கவுதம் கம்பீர், ஃபார்மில் இல்லாத அபிஷேக் சர்மாவிடம் மிகவும் தீவிரமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
அணி நிர்வாகத்தால் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் ஃபார்முக்கு திரும்ப முடியாமல் போன அபிஷேக் சர்மாவுக்கு கடுதம் கம்பீர் அறிவுரைகளை வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.