இந்நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்தும், விராட் கோலி குறித்தும் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், தோனி ஒரு கேப்டனாக களத்திற்குள் செல்லும் முன் அனைத்து கோணங்களிலும் சிந்திப்பார். அனைத்து ரிஸ்க்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்ற முடிவில் தோனி இருப்பார். மேலும் எதிரணி தவறு செய்யட்டும் அதுவரை காத்திருப்போம் என்று தோனி நினைப்பார். தோனியின் இந்த நம்பிக்கை அருக்கு பல வெற்றிகளை கொடுத்தது.