#INDvsENG முதல் டி20: இந்திய அணியில் யாருமே எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ்.! டாஸ் வென்ற இங்கிலாந்தின் தரமான முடிவு

First Published Mar 12, 2021, 6:51 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். பனி காரணமாக 2வது இன்னிங்ஸில் பந்துவீசுவது சவாலாக இருக்கும் என்பதால், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் மோர்கன்.
undefined
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - ஷிகர் தவான் இறங்குகின்றனர். யாருமே எதிர்பார்த்திராத விதமாக ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியிலும், அடுத்த போட்டியிலும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக கேப்டன் கோலி தெரிவித்தார்.
undefined
ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் ஆடுகிறார்.
undefined
3 ஸ்பின்னர்கள் ஆடுகின்றனர். வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் மற்றும் சாஹல் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.
undefined
இந்திய அணி:கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், சாஹல்.
undefined
இங்கிலாந்து அணி:ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், ஆர்ச்சர், ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் உட்.
undefined
click me!