காதலியை கரம்பிடிக்கும் தீபக் சாஹர்..! ஜூன் 1 திருமணம்

First Published May 21, 2022, 5:48 PM IST

இந்திய மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் அவரது காதலி ஜெயா பரத்வாஜை வரும் ஜூன் 1ம் தேதி திருமணம் செய்கிறார்.
 

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர். ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான தீபக் சாஹர், இந்திய அணிக்காக 7 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
 

ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரராக திகழும் தீபக் சாஹர் 63 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் பணியை செவ்வனே செய்துவந்த தீபக் சாஹரை, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடி என்ற பெரும் தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி.
 

ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 15வது சீசன் முழுக்க தீபக் சாஹர் ஆடவில்லை. இன்னும் 2 மாதங்களுக்கு அவர் ஆடமுடியாது. இந்நிலையில், தீபக் சாஹர் அவரது காதலி ஜெயாவை வரும் ஜூன் 1ம் தேதி திருமணம் செய்கிறார்.
 

தீபக் சாஹர் - ஜெயா காதல் நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தங்களது உறவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகின்றனர். வரும் ஜூன் 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

click me!