இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா, ஐபிஎல் போன்ற போட்டிகளில் மூன்றாவது நடுவரின் இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறினார். எல்லைக்கோட்டில் சிக்ஸரைத் தடுத்த கரண் நாயரிடம் பேசியதாகவும், அது நிச்சயமாக சிக்ஸர் என்று அவர் உறுதிப்படுத்தியதாகவும் பிரீத்தி ஜிந்தா கூறினார்.
நடுவரின் தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது
"இவ்வளவு பெரிய போட்டியில், மூன்றாவது நடுவருக்கு இவ்வளவு தொழில்நுட்பம் இருக்கும்போது, இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நான் போட்டிக்குப் பிறகு கரணிடம் பேசினேன், அது நிச்சயமாக சிக்ஸர் என்று அவர் உறுதிப்படுத்தினார்" என்று பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நேற்று நடந்த போட்டியின்போது இந்த சர்ச்சை எழுந்தது.