ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே ஆடும் லெவன்
First Published Sep 17, 2020, 11:24 PM ISTஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவில், அந்த அணியின் நட்சத்திர மற்றும் சீனியர் வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆடவில்லை.
எனவே ரெய்னா இறங்கிவந்த 3ம் வரிசையில் யார் இறங்குவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டியின் ஆடும் லெவனில் சிஎஸ்கே அணி வீரர்களான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சாம் கரன் ஆகிய இருவரும் இடம்பெற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரை முடித்துவிட்டு, துபாய் சென்றுள்ளனர். அவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். எனவே அவர்கள் முதல் சில போட்டிகளில் கண்டிப்பாக ஆடமாட்டார்கள்.
எனவே முதல் போட்டியில் சிஎஸ்கேவின் ஆடும் லெவனில் களமிறங்கும் 4 வெளிநாட்டு வீரர்களாக ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், பிராவோ மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவின் முதல் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.