இந்த போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்ய, சிஎஸ்கே கேப்டன் தோனி, நான் டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் தான் வீசியிருப்பேன் என்றார். ஆனால் போட்டி முடிந்த பின் பேசிய தோனி, பிட்ச் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆட சாதகமாக இருந்தது. இந்த ஸ்கோர் சற்றே அதிகமானது என்றார். மேலும், தொடக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், இறுதியில் த்ருவ் ஜுரெலும் அதிரடியாக ஆடியதால் தான் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் உயர்ந்ததாகவும் தெரிவித்தார் தோனி.