IPL: சிஸ்கே, டெல்லி அணிகள் படைத்த மோசமான சாதனை! தோனி இருந்தும் இந்த நிலையா?

Published : May 22, 2025, 07:40 AM IST

ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோசமான சாதனையை படைத்துள்ளன. இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி விட்டன.

PREV
14
CSK and Delhi Capitals Worst Record

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்பு விளையாடிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

24
டெல்லி அணியின் மோசமான சாதனை

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஐஸ்பிரித் பும்ரா, மிட்ச்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த போட்டியில் படுதோல்வி அடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவர்பிளேயில் டெல்லி கேப்பிடல்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் 2025ல் பவர்பிளேயில் டெல்லி அணி 26 விக்கெட்டுகளை இழந்தது.

34
மோசமான சாதனையில் சிஎஸ்கே முதலிடம்

இதன்மூலம் இந்த சீசனில் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்த 2வது அணி என்ற மோசமான சாதனையை டெல்லி அணி படைத்துள்ளது. இந்த சீசனில் பவர்பிளேயில் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 28 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி முதல் 4 போட்டிகளில் வரிசையாக ஜெயித்த நிலையில், அடுத்து 4 போட்டிகளில் வரிசையாக தோற்றுள்ளது.

44
பிளே ஆப் சுற்றுக்கு சென்ற 4 அணிகள்

அந்த அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடாததே தோல்விக்கு காரணமாகி விட்டது. மேலும் நேற்றைய போட்டியில் கேப்டன் அக்சர் படேல், மிட்ச்செல் ஸ்டார்க் ஆடாதது பெரும் பின்னடைவாகி விட்டது. இந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் பொறுப்பு கேப்டன் டாப் டூ பிளிசிஸ், ''நாங்கள் களத்தில் சிறப்பாக இருந்தோம் என்று உணர்ந்தோம். வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்தினார்கள்.

கடைசி இரண்டு ஓவர்களில் கிட்டத்தட்ட 50 ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். இது எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது. அக்சர் படேல், மிட்ச்செல் ஸ்டார்க் இல்லாததும் பின்னடைவை ஏற்படுத்தியது'' என்றார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனால் ஆர்சிபி முதன்முறையாக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories